Monday, 12 September 2011

வினையாலணையும் காதல்

நான்
உன்னை கலைத்தேன்
நீ
என்னை கலைத்தாய்...

நான்
உன்னில் மூழ்குகிறேன்
நீ
என்னுள்  மூழ்குகிறாய்...

நீயும் கடல்
நானும் கடல்

தாகம் கடலுக்கு...

வைத்த மல்லியும்
மூச்சுத் திணறி
மாய்த்துப்போனது...

கலைந்து கிடக்கும்
ஆடைகளை போலதான்
இப்போது
நம் நிலையும்...

ஆடைகளுக்கும் சிறுவருத்தம்
தன் பங்கீடு
குறைந்ததை எண்ணி...

சொர்க்கத்தின் எளியவழி
கண்டுகொண்டோம் நம்மிடமே...

இருப்பினும்
இருட்டின் வேலைநேரம்
நீட்டிக்கப்பட வேண்டும்!

No comments:

Post a Comment