Sunday, 5 February 2012

திருமண அழைப்பு

புதிதாய் துளிர்த்த
பச்சை இலைபோல்
பரவசமாய்...

உருகி வழிந்தோடும்
பனிமழையின் நீரோடைபோல்
குளுமையாய்...

கோவில் கோபுரத்தில்
அமர்ந்து படபடக்கும் - புறாக்களின்
ஆர்ப்பரிப்பாய்...

காற்றில் தவழும்
நீர்க்குமிழிகளை துரத்தும் - குழந்தைகளின்
குதூகலமாய்...

அரும்பிய புது உணர்வில்
மலர்ந்த இரு பூக்களின்
மணவிழாவிற்கு வந்து
மன மகிழ்வை பகிர்க
என
அன்புடன் அழைக்கின்றேன்...
                                                        சி.சுரேஷ்

No comments:

Post a Comment