* ஊசித்தூறல் பட்டு
பாறைகள் உடைபடுவதில்லை- ஆனால்
உன் ஊசிப்பார்வையில்
நெஞ்சம் உடைபடுகிறதடி.....
* கடலலைகள் பட்டு
கரைகள் கரைவதில்லை- ஆனால்
உன் நினைவலைகளில்
மனம் கரையுதடி.....
* வெய்யில் பட்டு
காகம் வெளுப்பதில்லை- ஆனால்
உன் நிழலினினால்
ஜீவன் வெளுக்குதடி.....
* மின்னல் பட்டு
மின்மினி ஒளிர்வதில்லை- ஆனால்
உன் கண்களினால்
காதல் ஒளிர்கிறதடி.....
* தென்றல் பட்டு
வேர்கள் சிலிர்ப்பதில்லை- ஆனால்
உன் கைவிரல் தீண்டலில்
உயிர் சிலிர்க்குதடி.....
by suresh
No comments:
Post a Comment