Wednesday, 6 July 2011

காதல் வசம்


*  ஊசித்தூறல் பட்டு
   பாறைகள் உடைபடுவதில்லை- ஆனால்
   உன் ஊசிப்பார்வையில்
   நெஞ்சம் உடைபடுகிறதடி.....

*  கடலலைகள் பட்டு
    கரைகள் கரைவதில்லை- ஆனால்
    உன் நினைவலைகளில்
    மனம் கரையுதடி.....

*  வெய்யில் பட்டு
    காகம் வெளுப்பதில்லை- ஆனால்
    உன் நிழலினினால்
    ஜீவன் வெளுக்குதடி.....

*  மின்னல் பட்டு
    மின்மினி ஒளிர்வதில்லை- ஆனால்
    உன் கண்களினால்
    காதல் ஒளிர்கிறதடி.....

*  தென்றல் பட்டு
    வேர்கள் சிலிர்ப்பதில்லை- ஆனால்
    உன் கைவிரல் தீண்டலில்
    உயிர் சிலிர்க்குதடி.....
                                        by suresh




No comments:

Post a Comment