Wednesday, 6 July 2011

நினைவுகள்

* நானறியா நேரங்களில்
  நினைவின்
  சாளரம் திறந்து
  வருகிறாய்!

* கடந்துபோன நிஜங்களின்
  நிழல் ஓவியத்தின்
  வர்ணங்களில் சிக்கி
  பாறாங்கல்லாய் கணக்கிறது
  இதயம்!

* எதையும் மறப்பதற்கில்லை
  பூக்களின் வாசம்போல்
  புதைந்துகிடக்கின்றது
  பார்வைக்கு மட்டும்
  அகப்படாமல்!
                          by suresh

No comments:

Post a Comment