Wednesday, 6 July 2011

நீயும் நானும்


*  தெளிந்த ஓடையில்
    தெரியும்
    கூழாங்கற்களைப் போலவே
    உன் நினைவுகளும்
   அடி மனதில்
   அழகாய் சிதறியபடி...

*  ஒவ்வொரு கூழாங்கற்களை
    எடுக்கும்போதும்
    ஒரு சலசலப்பு இருப்பதைப்போலவே
    உன் நினைவுகளும்
    ஏற்படுத்தவே செய்கிறது.

*  உன்னை ஞாபகப்படுத்தும்
   அநேக அடையாளங்களால்
   சில பொருட்களில்
   உன்னை பதித்துவிட்டு
   சென்றிருக்கிறாய்
   உனக்கு தெரியாமலேயே...

*  எங்கோ ஒரு மூலையில்
    நீயும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
    என்னைப் பற்றிய நினைவுகளை
    சுமந்துகொண்டு.....
    என்னைப்போலவே.....
                                     by suresh

No comments:

Post a Comment