* தெளிந்த ஓடையில்
தெரியும்
கூழாங்கற்களைப் போலவே
உன் நினைவுகளும்
அடி மனதில்
அழகாய் சிதறியபடி...
* ஒவ்வொரு கூழாங்கற்களை
எடுக்கும்போதும்
ஒரு சலசலப்பு இருப்பதைப்போலவே
உன் நினைவுகளும்
ஏற்படுத்தவே செய்கிறது.
* உன்னை ஞாபகப்படுத்தும்
அநேக அடையாளங்களால்
சில பொருட்களில்
உன்னை பதித்துவிட்டு
சென்றிருக்கிறாய்
உனக்கு தெரியாமலேயே...
* எங்கோ ஒரு மூலையில்
நீயும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
என்னைப் பற்றிய நினைவுகளை
சுமந்துகொண்டு.....
என்னைப்போலவே.....
by suresh
No comments:
Post a Comment