Monday, 8 August 2011

கூடல்

வாழ்க்கையின் நதிதனில்
காதல் காமம் இரண்டுமே
கலந்தோடி
அர்த்தம் தேடுகிறது இரட்டைகிளவிபோல..

காதல்புரிய முன்வரும்போது
மோகமுள் குத்தி காமம் ஒழுகியது!

காமம் பருக முன்வரும்போது
நுழைவாயில் காதலால் திறந்தது!

காதல் நழுவி காமத்தில் விழுந்து-பின்
எழுந்து காதலையே உடுத்திக்கொள்கிறது!

காதல் சிலநேரம் காமத்தின் கதவைத் தட்டுகிறது;
சிலநேரம் கதவை உடைத்தெரிந்துவிட்டு
காதல் காமமாகிறது...!
காமமாகி காமமாகி பின் காதலாகிறது
காமத்தின் பிடியில் மேலும் காதலாகிறது.

புயலுக்கு முன்னும் பின்னும் அமைதிபோல்
காமத்தின் முன்னும் பின்னும் காதலால் நிறைகிறது...!
                                                                          By   Suresh

No comments:

Post a Comment