Tuesday, 2 August 2011

பிழை சேர்த்துவிட்டான்

மனவளத்தைப் பெருக்க
ஆன்மீகம் நாடியவன்
மனமலத்தைப் பெருக்கிக்கொண்டான்...

உடலை மட்டும் கழுவிக்கொண்டவன்
உளத்தைக் கழுவ மறந்துவிட்டான்...

கடவுள் என்றான்
பெண்களை தன் அறையில்
கட  உள் என்றான்...

ஆன்மசக்தி அளிக்கிறேன் என்றவன்
தன்
ஆண்மை சக்தியை அளித்துக் கொண்டிருக்கிறான்...

குடும்பம் மறந்தவள்
குடு  இன்பம் என
அங்கே நாடுகிறாள்...

தேசம் தாண்டி யோகக் கலை சேர்ப்பேன் என்றவன்
பிழையையல்லவா சேர்த்துவிட்டான்.!

No comments:

Post a Comment