Tuesday, 16 August 2011

ஞாபகம்

எப்போதோ
வாங்கியிருக்கிறேன்
காதலியிடம்
சில முத்தங்கள்.....
இப்போது
ஞாபகப்படுத்துகிறது
குழந்தையின்
சிறு முத்தங்கள்.....!

Monday, 8 August 2011

கூடல்

வாழ்க்கையின் நதிதனில்
காதல் காமம் இரண்டுமே
கலந்தோடி
அர்த்தம் தேடுகிறது இரட்டைகிளவிபோல..

காதல்புரிய முன்வரும்போது
மோகமுள் குத்தி காமம் ஒழுகியது!

காமம் பருக முன்வரும்போது
நுழைவாயில் காதலால் திறந்தது!

காதல் நழுவி காமத்தில் விழுந்து-பின்
எழுந்து காதலையே உடுத்திக்கொள்கிறது!

காதல் சிலநேரம் காமத்தின் கதவைத் தட்டுகிறது;
சிலநேரம் கதவை உடைத்தெரிந்துவிட்டு
காதல் காமமாகிறது...!
காமமாகி காமமாகி பின் காதலாகிறது
காமத்தின் பிடியில் மேலும் காதலாகிறது.

புயலுக்கு முன்னும் பின்னும் அமைதிபோல்
காமத்தின் முன்னும் பின்னும் காதலால் நிறைகிறது...!
                                                                          By   Suresh

Wednesday, 3 August 2011

நெருடல்

நெருடலாகதான் இருக்கிறது
ரோஜாவின் மணமும்
பிணத்தின்மீது
மாலையாகும்போது.

Tuesday, 2 August 2011

பிழை சேர்த்துவிட்டான்

மனவளத்தைப் பெருக்க
ஆன்மீகம் நாடியவன்
மனமலத்தைப் பெருக்கிக்கொண்டான்...

உடலை மட்டும் கழுவிக்கொண்டவன்
உளத்தைக் கழுவ மறந்துவிட்டான்...

கடவுள் என்றான்
பெண்களை தன் அறையில்
கட  உள் என்றான்...

ஆன்மசக்தி அளிக்கிறேன் என்றவன்
தன்
ஆண்மை சக்தியை அளித்துக் கொண்டிருக்கிறான்...

குடும்பம் மறந்தவள்
குடு  இன்பம் என
அங்கே நாடுகிறாள்...

தேசம் தாண்டி யோகக் கலை சேர்ப்பேன் என்றவன்
பிழையையல்லவா சேர்த்துவிட்டான்.!